PULSED அமைப்பின் மாணவர் கௌரவிப்பு விழாவில் கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு கௌரவம்

Date:

PULSED (Puttalam Union for Literacy, Social and Encouragement Development) அமைப்பின் ஏற்பாட்டில், புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் கௌரவிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று புத்தளம் மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு பெருமை சேர்த்த கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு, PULSED அமைப்பின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்கள், இவ்வாறான அங்கீகாரமும் மரியாதையும் தமக்குப் பெரும் ஊக்கமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டு, PULSED அமைப்புக்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இந்த விழாவின் மற்றொரு சிறப்பாக, PULSED அமைப்பின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக பரிசுகள் வழங்கி அவர்களது வெற்றியை உற்சாகப்படுத்தினர்.

Popular

More like this
Related

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக்...

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...