PULSED அமைப்பின் மாணவர் கௌரவிப்பு விழாவில் கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு கௌரவம்

Date:

PULSED (Puttalam Union for Literacy, Social and Encouragement Development) அமைப்பின் ஏற்பாட்டில், புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் கௌரவிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று புத்தளம் மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு பெருமை சேர்த்த கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு, PULSED அமைப்பின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்கள், இவ்வாறான அங்கீகாரமும் மரியாதையும் தமக்குப் பெரும் ஊக்கமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டு, PULSED அமைப்புக்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இந்த விழாவின் மற்றொரு சிறப்பாக, PULSED அமைப்பின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக பரிசுகள் வழங்கி அவர்களது வெற்றியை உற்சாகப்படுத்தினர்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...