கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (18) காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஒன்பது மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக NWSDB தெரிவித்துள்ளது.

இதனால், நீர் விநியோக நிறுத்தக் காலத்தில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து போதுமான அளவு நீரை சேமித்து வைக்குமாறும் அது அறிவித்துள்ளது.

நீர் விநியோகத் தடை பின்வரும் பகுதிகளை பாதிக்கும்:

கொழும்பு 01 தொடக்கம் 15
பத்தரமுல்ல
பெலவத்த
ஹோகந்தர
கொஸ்வத்த
தலவத்துகொட
ராஜகிரிய
மிரிஹான
மதிவெல
நுகேகொடை
நாவல
கொலன்னாவை
ஐடிஎச்
கொட்டிகாவத்தை
அங்கொடை
வெல்லம்பிட்டி
ஒருகொடவத்தை
முல்லேரியாவ
மஹரகம
பொரலஸ்கமுவ
தெஹிவளை
இரத்மலானை
மொரட்டுவ.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...