சூடானில் பாரிய நிலச்சரிவு; சுமார் 1,000 பேர் உயிரிழப்பு!

Date:

சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள மார்ரா மலைச்சரிவுப் பகுதிக்கட்டப்பட்ட ஒரு கிராமம் நிலச்சரிவில் சிக்கி முழுதாக அழிக்கப்பட்டுள்ளது.

சூடான் விடுதலை இயக்கம்/ இராணுவம் (SLM/A) எனப்படும் போராட்ட இயக்கத்தின் தகவலின்படி, சுமார் 1,000 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், ஒரேயொருவர் மாத்திரம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றுள்ளதோடு, பல நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழையைத் தொடர்ந்து இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

உடனடியாக SLM/A, ஐ.நா மற்றும் சர்வதேச உதவி அமைப்புகளிடம் உடனடி உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி கோரியுள்ளது.

குறித்த கிராமம் தற்போது முழுதும் மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக SLM/A அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

குறித்த கிராமம் அமைந்துள்ள தார்ஃபூர் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் சிவில் போர் காரணமாக பலர் பாதுகாப்பிற்காக இந்த மலைச்சரிவுப் பகுதியில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும், இங்கு போதிய உணவு, மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகள் இல்லாத நிலையே இருந்து வந்துள்ளது.

இங்கு கடந்த இரண்டு வருடமாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போர், மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பசி, பட்டினி உள்ளிட்ட நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய அனர்த்தமானது, முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை

இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப்...

கல்விச் சீர்திருத்த செயற்பாடுகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: தேசிய சூரா சபை பிரதமருக்கு அவசர கடிதம்

இலங்கையில் கல்விக் கொள்கையினை வகுக்கும் அமைப்புகளில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் போதுமாக...

ஒஸ்கார் 2026: காசாவில் கொல்லப்பட்ட சிறுமியின் கதையைக் கூறும் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ திரைப்படம் பரிந்துரை

உலகின் மிகமுக்கியமான திரைப்பட விருதான ஒஸ்கார் விருதுகளின் சிறந்த சர்வதேச திரைப்படம்...

சுற்றுலாத்துறையை மேம்படுத்த  புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு நிதி ஒதுக்கீடு 

காத்தான்குடி பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக, புதிய காத்தான்குடி அல்...