முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பண்டுவஸ்நுவர அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல் கருத்தரங்கு

Date:

குருநாகல், பண்டுவஸ்நுவர பிரதேச அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் பாவனையின் விபரீதங்கள்  என்ற தலைப்புக்களில் ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கொன்று 30 ஆம் திகதி பண்டார கொஸ்வத்த மன்பஉல் கைராத் ஜும்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ்,இந்தக்கருத்தரங்கு இடம்பெற்றது.

வளவாளர்களாக எம்.என்.என்.எம்.ரமீஸ் (ஆசிரியர்) மற்றும் ஏ.ஆர்.ஏ.ஹபீழ் (அபிவிருத்தி உத்தியோகத்தர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பண்டுவஸ்நுவர பிரதேச பிரிவுக்குட்பட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்கள்,அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் விசேட குழுக்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய...

தரம் 2 -11 வரையான மாணவர்கள் ஆட்சேர்ப்பு சுற்றறிக்கையில் மாற்றம்: அமைச்சரவை அங்கீகாரம்

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 51,969 பேர் சித்தி!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளில் மொத்தம்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வவ்போது மழை

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...