கடந்த 9 மாதங்களில் வீதி விபத்துக்களில் 1,897 பேர் உயிரிழப்பு!

Date:

கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் துறையின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கை 1,781 ஆக உயர்ந்துள்ளது.

அதிகரித்து வரும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்ட அமுலாக்கம் மற்றும் சாரதிகள் பொறுப்பான வகையில் வாகனம் செலுத்துவது அவசியம்.

போக்குவரத்து பொலிஸார், கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களை கண்காணிக்க நாடு முழுவதும் 70 அதிவேக கண்டறியும் இயந்திரங்களை நிறுவியுள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகளவில் அதிகரித்துள்ளது. அதன்படி, 923 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக 514 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் வீதிகளில் மேலும் துயர சம்பவங்களைத் தடுக்க, மேம்படுத்தப்பட்ட வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிக பொது விழிப்புணர்வும் அவசியம் என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...