25 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்

Date:

25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், களுத்துறை போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் வைத்தியர் சுரங்கி சோமரத்ன இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

பக்கவாத நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 30 வீதமானவர்கள் 20 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று வைத்தியர் சுரங்கி சோமரத்ன சுட்டிக்காட்டினார்.

பக்கவாதம் ஏற்படுவதற்கான பிரதான அபாய காரணியாக உயர் இரத்த அழுத்தம் (Hypertension) அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 50 வீதமான பக்கவாத சம்பவங்களுக்கு உயர் இரத்த அழுத்தமே காரணமாக உள்ளது.

பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட நரம்பியல் வைத்தியர் சுரங்கி சோமரத்ன விரிவாக எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...