பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

Date:

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களை அதிகம் கொண்ட தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருப்பதை நிலவரங்கள் காட்டுகின்றன.

அதாவது, ஒட்டுமொத்தமாக பீகார் சட்டப்பேரவை 243 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.

தற்போதுவரை, முஸ்லிம் மக்களை அதிகம் கொண்ட 16 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதீஷ் குமாரின் ஜனதா தளம், எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளதாகவும், கடந்த 2020 தேர்தலைக் காட்டிலும், 2025 தேர்தலில், கூடுதலாக இதுபோன்ற 8 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், சிராக் பாஸ்வானின் எல்.ஜே.பி முஸ்லிம் வாக்காளர்களை அதிகம் கொண்ட 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2022 பிகார் ஆய்வில் முஸ்லிம் மக்கள் 17.7 சதவிகிதம் இருந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் இவர்களில் 80 சதவிகித வாக்குகளும் 2020 தேர்தலில் 77 சதவிகித வாக்குகளும் மகாகத்பந்தன் கூட்டணிக்கே கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த 2025 தேர்தலில், இந்த பகுதிகளில் எல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மகாகத்பந்தன் கூட்டணி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...