அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் விசேட கலந்துரையாடல்

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பான விசேட ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை, வெள்ளப் பாதிப்புகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் அவசர தேவைகள் ஆகியவற்றை முன்னிட்டு, உடனடியாக எவ்வாறு பயனுள்ள பங்களிப்புகளை வழங்கலாம் என்பது விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படுவது, உதவி பொருட்கள் விநியோகம், தங்குமிட வசதிகள், உணவு மற்றும் மருத்துவ ஆதரவு வழங்கும் முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சமூக ஒருமைப்பாட்டும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் தற்போது மிக அவசியமானவை என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...