இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

Date:

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்துள்ளது.

அதன்படி நவம்பர் 17 ஆம் திகதி நிலவரப்படி, இறைவரித் திணைக்களத்தின் மொத்த வருவாய் வசூல் சுமார் 2,002 பில்லியன் ரூபாவாக உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் இறைவரித் திணைக்களம் 1,942,162 மில்லியன் ரூபா வரிகளை வசூலித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, இந்த ஆண்டுக்கான மொத்த வருவாய் வசூல் 2,002,241 மில்லியன் ரூபாவாக உள்ளது.

2024 ஆம் ஆண்டின் மொத்த வருவாயுடன் ஒப்பிடும்போது இது 60,079 மில்லியன் ரூபா அதிகமாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் ஆர்.பி.எச். பெர்னாண்டோ, 2,002 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரிகளை வசூலிப்பதன் மூலம் அரசாங்கத்தின் நிதி நிலையை வலுப்படுத்துவதில் திணைக்களம் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது என்றார்.

இதற்கிடையில் கடந்த வாரம் இலங்கை சுங்கத் திணைக்களம், 2025 ஆம் ஆண்டுக்கா நிர்ணயிக்கப்பட்ட 2,115 பில்லியன் ரூபா வாருவாய் இலக்கினை விஞ்சியுள்ளதாக அறிவித்தது.

அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் 2,117.2 பில்லியன் ரூபாவை இலங்கை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளது.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...