இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

Date:

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த நபர்  ஒருவர்  அளித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று (12) காலை  9.55  மணியளவில் சந்தேகநபரான அதிகாரியை கைது செய்திருந்தனர்.

முறைப்பாட்டாளரினால் தேக்கு மரம் ஒன்றை வெட்டுவதற்கான இரு அனுமதிப் பத்திரங்களை தயாரிப்பதற்கு தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்காக, ஒரு அனுமதிப்பத்திரத்துக்கு 5 ஆயிரம் ரூபா பணத்தை கப்பமாக கோரியுள்ளார்.

பின்னர் முறைப்பாட்டாளரிடமிருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான அதிகாரியை தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலகத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் வைத்து அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.  கைதான சந்தேகநபர் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...