தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

Date:

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆபாசமாகத் தன்னை வெளிப்படுத்தியதால் “அச்ச உணர்வுடன்” இருந்ததாக தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனியாகப் பயணம் செய்துவரும் 24 வயதுடைய நியூசிலாந்து பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தை சேர்ந்த மோலி என்ற அந்தப் பெண், ஆபாசமாகத் தன்னை வெளிப்படுத்திய குற்றத்திற்காக அந்த நபரைக் கைது செய்த உள்ளூர் பொலிஸாரின் விரைவான நடவடிக்கையால் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சிலர் இந்தச் சம்பவத்திற்காகத் தன்னையே குற்றம் சாட்ட முயன்றது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது தனிப்பயண சாகசங்களை இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆவணப்படுத்தும் இந்த இளம் பயணி, தனது பதிவில் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு தனிச் சம்பவம் ஒரு நாட்டையோ அல்லது தனியாகப் பயணிக்கும் பெண்களின் பயணத்தையோ வரையறுக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“நான் அந்த காணொளி இந்த அளவுக்குப் பெரியளவில் வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது பெண்களின் பாதுகாப்பு, தனியாகப் பயணம் செய்தல், மற்றும் நாம் இன்றும் எதிர்கொள்ளும் யதார்த்தம் பற்றி உண்மையான உரையாடலைத் தொடங்கினால், அது பயனுள்ளது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது ஒரு மாத காலப் பயணத்தில் தான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்த இலங்கை ஒரு “அற்புதமான இடம்” என்றும் வர்ணித்துள்ளார்.

எனவே, ஒரு தனிநபரின் நடத்தையால் இலங்கை மீதான பொதுவான கருத்துக்கள் மாறிவிடக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள் பயமின்றி எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும் என்றும், அதற்கு அவர்கள் தங்கள் இருப்பை நியாயப்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தனது ஆதரவாளர்களுக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை சுற்றுலாத்துறை காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்த அவர், “இந்த உரையாடலைத் தொடர்வோம், ஆனால் உலகம் முழுவதும் நல்ல மனிதர்கள் நிறைந்துள்ளார்கள் என்பதையும் நினைவில் கொள்வோம்,” என்று முடித்துள்ளார்- என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...

தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில்...