சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

Date:

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை வருமானமாக 186.1 மில்லியன் அமெரிக்கன் டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான சுற்றுலாத்துறை வருமானமான 2,533.7 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.9 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19,72,957 ஆகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 4,43,622 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 1,80,592 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 1,44,308 பேர் ரஷ்யாவிலிருந்தும், 1,23,053 பேர் ஜெர்மனியிலிருந்தும், 1,15,400 பேர் சீனாவிலிருந்தும் வருகை தந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...