அனர்த்த உதவித் திட்டம் தொடர்பிலான ஜம்இய்யதுல் உலமாவின் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இடையில் அனர்த்த உதவித் திட்டம் வழங்குவது தொடர்பிலான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல் இன்று (30) ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில், பின்வரும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்மானங்களும் எட்டப்பட்டன.

1) நிவாரணம் தாமதமாக கிடைக்கப் பெற்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு அவற்றை துரிதமாக பெற்றுக் கொடுத்தல்.

2) அனர்த்த நிலைமைகளினால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளான கம்பளை, ரம்புக்கல, மூதூர் போன்ற பகுதிகளில் அரசாங்க தரப்புடன் இணைந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தல்.

3) இன்றிரவும் நாளையும் பெரும் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு குறித்த தகவலை தெரியப்படுத்துவதுடன் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குதல்.

இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...