அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் விசேட கலந்துரையாடல்

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பான விசேட ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை, வெள்ளப் பாதிப்புகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் அவசர தேவைகள் ஆகியவற்றை முன்னிட்டு, உடனடியாக எவ்வாறு பயனுள்ள பங்களிப்புகளை வழங்கலாம் என்பது விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படுவது, உதவி பொருட்கள் விநியோகம், தங்குமிட வசதிகள், உணவு மற்றும் மருத்துவ ஆதரவு வழங்கும் முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சமூக ஒருமைப்பாட்டும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் தற்போது மிக அவசியமானவை என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...