கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
இதில் 246,521 பேர் பாடசாலை மாணவர்களும் 94,004 பேர் தனியார் மாணவர்களும் ஆவர்.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்துதல், சிறப்பு கருத்தரங்குகளை நடத்துதல், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பற்றி விவாதித்தல் உள்ளிட்ட பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நாளை (04) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும்.
