தன் அறிவாலும் பணிவாலும் மக்களின் உள்ளங்களை கவர்ந்து மார்க்கப் பணியாற்றிய அஷ்ஷெய்க் முப்தி யமீன் மறைவு.

Date:

அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் புத்தளம் சமூகத்திற்கும் குறிப்பாக கல்விச் சமூகத்திற்கும் பெரும்பங்களிப்பு செய்த ஒருவராவார்.

ஓலைக் குடிசையாக ஆரம்பிக்கப்பட்ட அஷ்ரபிய்யா அரபுக் கல்லூரியின் ஆரம்ப காலத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

அங்கு தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய அவர்,’அதிக முயற்சி உடையவர்,’ ‘ஒழுக்கம், தக்வா (இறையச்சம்) மற்றும் உயரிய பண்பாடுகளால் தன்னை அலங்கரித்தார். எப்போதும் பிறரை மதிக்கின்ற தன்மை கொண்ட அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் அடக்கமும் பணிவும் கொண்ட பண்பாளர்.

அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரியின் முதலாவது ஷரீயாத்துறை மாணவராகவும் அறிவைத்தேடும் ஆர்வத்தில் இந்தியா வரை சென்று தனத மேற்படிப்பை சிறப்பாக பூர்த்தி செய்வராகவும் அஷ்ரபிய்யாவின் முதலாவது ‘இப்தா’ (மார்க்கத் தீர்ப்பு) துறையை வெற்றிகரமாக முடித்த சிறந்த ஆலிமாகவும் அவர் திகழ்ந்தார்.

புத்தளம் வாழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்று மார்க்கப் பணியிலும் அறிவைப் பரப்புவதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு நூற்றுக்கணக்கான உள்ளங்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பிய அறிஞர் முப்தி யமீன் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.

சுவன வாழ்க்கையை அவருடைய தாயகமாக ஆக்குவானாக. அவர்களை இழந்து துன்பப்படும் அவரது குடும்பித்தினரும் நெருக்கமானவர்களும் இந்த இழப்பை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவனாக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை...

நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை.

இன்றையதினம் (11) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினை சந்தித்தார் ரவூப் ஹக்கீம்

இந்தியாவின், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம்...

தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து...