தன் அறிவாலும் பணிவாலும் மக்களின் உள்ளங்களை கவர்ந்து மார்க்கப் பணியாற்றிய அஷ்ஷெய்க் முப்தி யமீன் மறைவு.

Date:

அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் புத்தளம் சமூகத்திற்கும் குறிப்பாக கல்விச் சமூகத்திற்கும் பெரும்பங்களிப்பு செய்த ஒருவராவார்.

ஓலைக் குடிசையாக ஆரம்பிக்கப்பட்ட அஷ்ரபிய்யா அரபுக் கல்லூரியின் ஆரம்ப காலத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

அங்கு தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய அவர்,’அதிக முயற்சி உடையவர்,’ ‘ஒழுக்கம், தக்வா (இறையச்சம்) மற்றும் உயரிய பண்பாடுகளால் தன்னை அலங்கரித்தார். எப்போதும் பிறரை மதிக்கின்ற தன்மை கொண்ட அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் அடக்கமும் பணிவும் கொண்ட பண்பாளர்.

அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரியின் முதலாவது ஷரீயாத்துறை மாணவராகவும் அறிவைத்தேடும் ஆர்வத்தில் இந்தியா வரை சென்று தனத மேற்படிப்பை சிறப்பாக பூர்த்தி செய்வராகவும் அஷ்ரபிய்யாவின் முதலாவது ‘இப்தா’ (மார்க்கத் தீர்ப்பு) துறையை வெற்றிகரமாக முடித்த சிறந்த ஆலிமாகவும் அவர் திகழ்ந்தார்.

புத்தளம் வாழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்று மார்க்கப் பணியிலும் அறிவைப் பரப்புவதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு நூற்றுக்கணக்கான உள்ளங்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பிய அறிஞர் முப்தி யமீன் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.

சுவன வாழ்க்கையை அவருடைய தாயகமாக ஆக்குவானாக. அவர்களை இழந்து துன்பப்படும் அவரது குடும்பித்தினரும் நெருக்கமானவர்களும் இந்த இழப்பை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவனாக!

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...