இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால எச்சரிக்கைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் எதிர்பார்க்கப்படலாம், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் 200 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும், வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேற்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பிற பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது (60-70) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
