நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

Date:

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று (நவம்பர் 21) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பேரணியில் ஒலி பெருக்கி அமைப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸ் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய க.பொ.த உயர்தரப்  பரீட்சை மையங்கள் பல பேரணி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், அதிக ஒலி எழுப்பும் ஒலி அமைப்புகளைப் பயன்படுத்துவது பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறை ஏற்படுத்துமென்று குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைகள் இன்று காலை 8.30 மணி முதல் காலை 11.40 மணி வரையும், மீண்டும் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் நடத்தப்படுவதாகவும், தேர்வு செயல்முறையில் தலையிடும் எந்தவொரு செயல்பாடும் மாணவர்களை எதிர்மறையாக பாதிக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவதை நிர்வகிக்கும் தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், தேர்வு மையங்களுக்குள் நுழையும், அமர்ந்திருக்கும் அல்லது வெளியேறும் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் பொலிஸார் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பேரணி நடைபெறும் வளாகத்திற்குள் மட்டுமே ஒலி அமைப்புகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அனைத்து நிபந்தனைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் முதன்மை நோக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், உயர்தரப் பரீட்சையை தடையின்றி நடத்துவதை உறுதி செய்வதும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...