பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

Date:

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு, உயர் குருதியழுத்தம் உள்ளிட்ட நோய் நிவாரண மருந்துகள் இதில் உள்ளடங்குகின்றன. குறித்த மருந்துகளின் விலைகள் 60 முதல் 70 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளின் பெயர்ப் பட்டியலை ஊடகங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் மேலும் 200 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க அதிகார சபை தீர்மானித்துள்ளது.

மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த உயர்ந்தபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு அதனை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

மருந்தகங்களில் மாத்திரமன்றி தனியார் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் விலை நிர்ணயத்திற்கமைய மருந்துகளை விற்பனை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை- அமெரிக்காவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நேற்று (14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான...

2026 பாடசாலை பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை!

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி,...

– பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை

நாட்டிற்கு கிழக்காக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக,...