பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

Date:

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு, உயர் குருதியழுத்தம் உள்ளிட்ட நோய் நிவாரண மருந்துகள் இதில் உள்ளடங்குகின்றன. குறித்த மருந்துகளின் விலைகள் 60 முதல் 70 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளின் பெயர்ப் பட்டியலை ஊடகங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் மேலும் 200 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க அதிகார சபை தீர்மானித்துள்ளது.

மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த உயர்ந்தபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு அதனை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

மருந்தகங்களில் மாத்திரமன்றி தனியார் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் விலை நிர்ணயத்திற்கமைய மருந்துகளை விற்பனை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...