புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

Date:

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு கல்வி தொழிற்சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று (13) ஊடகங்களுக்கு உரையாற்றிய ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் அழைப்பாளர் உலபனே சுமங்கல தேரர், இந்த சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி டிசம்பர் 12 ஆம் திகதி பல தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளும் என்றும் அறிவித்தார்.

வழக்கமாக நிர்வாகத்தை ஆதரிக்கும் தொழிற்சங்கங்களிடமிருந்து கூட ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், முன்மொழியப்பட்ட பாடசாலை நேர நீட்டிப்பை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

நிலவும் எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல், முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வ சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்களை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், டிசம்பர் 12 க்குப் பிறகு நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்க தொழிற்சங்கங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் எச்சரித்தார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...