நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் பகுதியில் மூடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.
எனவே, கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் கேகாலை பிரதேசத்தில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், அத்தியாவசிய தேவை தவிர வேறு காரணங்களுக்காக அந்தப் பகுதியினூடாகப் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
