அடுத்த ஆண்டு முதல் பாடசாலை வேன்களுக்கு CCTV கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் அதைக் குறைக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.
ஜனவரி முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
