வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

Date:

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இன்றையதினம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உள்ளான கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்படி, இன்று காலை கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்துக்கும், பின்னர் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

அத்தோடு நாளை வியாழக்கிழமை கண்டி செல்லவுள்ள அவர், அங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த விகாரைகளுக்கு சென்று பௌத்த மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலியிலுள்ள சுனாமி நினைவு தூபிக்கு செல்லவுள்ள அவர், அங்கு சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். சனிக்கிழமை காலை அவர் நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...