சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

Date:

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை வருமானமாக 186.1 மில்லியன் அமெரிக்கன் டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான சுற்றுலாத்துறை வருமானமான 2,533.7 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.9 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19,72,957 ஆகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 4,43,622 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 1,80,592 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 1,44,308 பேர் ரஷ்யாவிலிருந்தும், 1,23,053 பேர் ஜெர்மனியிலிருந்தும், 1,15,400 பேர் சீனாவிலிருந்தும் வருகை தந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...