திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

Date:

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விகாரையின் விகாராதிபதி, திருகோணமலை கல்யான வம்ச திஸ்ஸ தேரர், இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனு விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சிக்கலை சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்வது பொருத்தமானது என்று நீதியரசர்கள் குறிப்பிட்டனர்.

அதன்படி, கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று, குறித்த கட்டுமானம் குறித்துப் பரிசோதனை செய்து, அதன் முடிவுகளுக்கு அமைய பொருத்தமான முடிவை எடுப்பதற்கு, மனுதாரர் தரப்பு மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தனர்.

அதன்படி, குறித்த மனுவை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் குழு, அது தொடர்பான முன்னேற்றத்தை அன்றைய தினம் அறிவிக்குமாறும் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...

தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில்...