இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

Date:

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த நபர்  ஒருவர்  அளித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று (12) காலை  9.55  மணியளவில் சந்தேகநபரான அதிகாரியை கைது செய்திருந்தனர்.

முறைப்பாட்டாளரினால் தேக்கு மரம் ஒன்றை வெட்டுவதற்கான இரு அனுமதிப் பத்திரங்களை தயாரிப்பதற்கு தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்காக, ஒரு அனுமதிப்பத்திரத்துக்கு 5 ஆயிரம் ரூபா பணத்தை கப்பமாக கோரியுள்ளார்.

பின்னர் முறைப்பாட்டாளரிடமிருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான அதிகாரியை தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலகத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் வைத்து அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.  கைதான சந்தேகநபர் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...