நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

Date:

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர் 3ஆம் திகதி முதல் வழங்கியிருப்பதாக இலங்கை காதி நீதவான்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ்  இப்ஹாம் யஹியா அறிவித்துள்ளார்.

இதன்படி பதுளை கொழும்பு வடக்கு, காத்தான்குடி மண்முனைப்பற்று மாஹோ, மாத்தளை, மாவனல்லை, புத்தளம் மற்றும் சிலாபம் சம்மாந்துறை, பாத்ததும்பறை உடதலவின்ன, உடுநுவர, ஆகிய பிரதேசங்களுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதுதொடர்பான நேர்முகப்பரீட்சை இடம்பெற்றதைத் தொடர்ந்து இப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காதி நீதிபதியின் இடத்திற்கு புத்தளம் சிலாபம் காதி நீதிபதியாக புத்தளம் நாகவில்லு பகுதியைச் சேர்ந்த என்.அஸ்மீர் நியமிக்கப்பட்டுள்ளதாக இச்செய்தியின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை மாவனல்லை பிரதேச காதி நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.தாலிப் என்பவர் சுகவீனம் காரணமாக தன்னால் இப்பதவியை ஏற்றுக்கொள்ள முடியாதென்று தனது இராஜினாமா கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.

New 10 Quazis 3.11.2025 (1)

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...