சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

Date:

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல் – பாஷர் நகரை, சூடான் இராணுவத்திடம் இருந்து, ஆர்.எஸ்.எப். குழு அண்மையில்  கைப்பற்றியதைத் தொடர்ந்து இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் எல் பாஷர் நகரில் மனித உரிமை மீறல்கள் பெரிதும் ஏற்பட்டுள்ளதாக பல சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

சூடானில், சக்திவாய்ந்த இரு இராணுவ தலைமைகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவால் உள்நாட்டு போர் நடந்து வருவது தெரிந்ததே.

சூடானின் அதிகாரப்பூர்வ இராணுவ தலைவரான ஜெனரல் அப்தெல் பத்தாஹ் அல் பூர்ஹான் தலைமையில் எஸ்.ஏ.எப், எனும் சூடான் ஆயுத படைகள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

டர்பூரில் இனப்படுகொலை செய்த ஜன்ஜாவித் போராளிக் குழுவைச் சேர்ந்த ஜெனரல் முகமத் ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப்., எனும் துணை இராணுவ விரைவு படைகள் செயல்பட்டு வருகின்றன.

நீண்டகாலமாக சர்வாதிகாரியாக இருந்த ஓமர் அல் பஷீரை, 2019ல் ஆட்சியில் இருந்து அகற்றியதில் இரு பிரிவினரும் இணைந்து முக்கிய பங்கு வகித்தமை தெரிந்ததே.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...