புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தனது பதவியிலிருந்தும், அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 34 ஆண்டுகளாக ஒரு அரசு அதிகாரியாக பணியாற்றி வந்ததாகவும் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதியன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.