போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

Date:

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு இன்று ( 27) விஜயம் செய்தார்.

வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக இன்று துருக்கி நாட்டுக்குச் சென்றடைந்தார்.

இந்த நிலையில், சிறப்பு விமானம் மூலம் அங்காரா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தடைந்த போப் லியோ, துருக்கி அதிபர் ரெசப் தயிப் எர்டோகனை நேரில் சந்தித்து உரையாடவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை இஸ்தான்புல் நகரத்துக்குச் செல்லும் போப் லியோ அடுத்த 3 நாள்கள் அங்கு நடைபெறவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பிற மதங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

இத்துடன், துருக்கியின் இஸ்னிக் நகரத்தில் உள்ள முதல் கிறிஸ்தவ சபையான நைசியா சபையின் 1700 ஆவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வதற்குத் திட்டமிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...