வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

Date:

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை அடுத்து, அப்பகுதி முஸ்லிம் சமூகத்தினர் நேற்று தீவிரமான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

கல்வி பயின்று வந்த மத்ரஸாவின் குளியலறையில் அந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முதல் கட்ட தகவல்களில் இதை தற்கொலை என கூறப்பட்டிருந்தாலும், மரணத்தின் சூழ்நிலைகள் தெளிவாக விளக்கப்படாததால் பலரும் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெலிமடைப் பள்ளிவாசல் முன்பாக திரண்ட பொதுமக்கள், சிறுவனின் மரணம் தொடர்பாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் ஊடகங்களிடம்,
“சிறுவன் நவம்பர் 03 ஆம் தேதி மரணமடைந்தான். என்ன காரணம் என்று இதுவரை யாரும் தெளிவுபடுத்தவில்லை. இப்படிப் பட்ட வயதில் உள்ள குழந்தை தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணமே வராது. இது ஒரு மர்ம மரணம்” எனக் கூறி வருத்தமும் கோபமும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை- அமெரிக்காவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நேற்று (14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான...

2026 பாடசாலை பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை!

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி,...

– பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை

நாட்டிற்கு கிழக்காக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக,...