கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

Date:

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு உதவி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கம்பளை பகுதி மக்களுக்கு இலங்கை ஹஜ் பயண முகவர் சங்கம் நிவாரண நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. கம்பளை டவுன் ஜும்மா மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபைக்கு இந்நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 100 மெத்தைகள், கேஸ் குக்கர்கள், தலையணைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன.

நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் இலங்கை ஹஜ் பயண  முகவர்  சங்கத்தின் தலைவரும், அம்ஜா ட்ரவல்ஸ் உரிமையாளருமான அல்ஹாஜ் எச்.எம். அம்ஜதீன் மற்றும் முன்னாள் செயலாளர் முகமது ஜசீம் ஆகியோர் கலந்து கொண்டு இந் நிவாரணப்பொருட்களை பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...

அரசாங்க நிவாரண முயற்சிகளுக்கு Kosma Feed Mills நிறுவனம் ரூ. 10 கோடி நன்கொடை.

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கத்தினால் நிலவிவரும் அசாதாரண பொருளாதார மற்றும்...