கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

Date:

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு உதவி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கம்பளை பகுதி மக்களுக்கு இலங்கை ஹஜ் பயண முகவர் சங்கம் நிவாரண நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. கம்பளை டவுன் ஜும்மா மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபைக்கு இந்நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 100 மெத்தைகள், கேஸ் குக்கர்கள், தலையணைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன.

நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் இலங்கை ஹஜ் பயண  முகவர்  சங்கத்தின் தலைவரும், அம்ஜா ட்ரவல்ஸ் உரிமையாளருமான அல்ஹாஜ் எச்.எம். அம்ஜதீன் மற்றும் முன்னாள் செயலாளர் முகமது ஜசீம் ஆகியோர் கலந்து கொண்டு இந் நிவாரணப்பொருட்களை பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...