பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

Date:

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பண்டிகை காலத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அனைத்து மூத்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.

இந்த பண்டிகை காலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸார் 2,500 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளது. மேலும் சில அதிகாரிகள் சிவில் உடையில் இருப்பார்கள்.

மேலும் இந்த பண்டிகை காலத்தில் உளவுத்துறை அதிகாரிகளும் பொது மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கடமைகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...