இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

Date:

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தமிழகத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பாளர் செல்வக்குமார் தன் யூடியூப் தளத்தில் தெரிவித்தார்.

செல்வக்குமார் கூறியதாவது, வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேகம் இந்த வாரம் ஒரு புயலாக வலுப்பெறக்கூடும். இதனால், பொதுமக்கள் மற்றும் பிராந்திய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். புயலாக மாறினாலும் மாறாவிட்டாலும், இலங்கையின் சில பகுதிகளில் இடையிடையே நிலையின்மையுடனான கனமழை பெய்யும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மற்றும் கடலோர நகரங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என அவர் எச்சரித்துள்ளார்.

 நவம்பர் மாதக் கடைசியில் வந்த புயலையும் செல்வக்குமார், முன்னறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...