பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

Date:

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக, ஹஜ் குழுவிடமிருந்து ரூ.5 மில்லியன் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (08) முற்பகல் ரூ. 5 மில்லியன் நன்கொடையை புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சிடம் ஹஜ் குழு வழங்கியுள்ளது.

இந்த நன்கொடைக்கான காசோலையை ஹஜ் குழு தலைவர், பட்டய கணக்காளர் ரியாஸ் மிஹ்லார், புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மற்றும் மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் ஆகியோரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஹஜ் குழு உறுப்பினர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...