பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

Date:

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக, ஹஜ் குழுவிடமிருந்து ரூ.5 மில்லியன் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (08) முற்பகல் ரூ. 5 மில்லியன் நன்கொடையை புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சிடம் ஹஜ் குழு வழங்கியுள்ளது.

இந்த நன்கொடைக்கான காசோலையை ஹஜ் குழு தலைவர், பட்டய கணக்காளர் ரியாஸ் மிஹ்லார், புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மற்றும் மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் ஆகியோரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஹஜ் குழு உறுப்பினர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

அவர்களுக்கு ரொட்டியையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொடுங்கள்: உலகக் கோப்பை குறித்த ஓர் அழகிய சிந்தனை

-நூஹ் மஹ்ழரி (தமிழ்நாடு) உலகக் கோப்பை கால்பந்தாட்ட காய்ச்சல் உலகம் முழுவதும் பற்றி...

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

பெண்களும் ஆண்களும் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் சுற்றறிக்கைகளைச் செல்லாததாக்கக் கோரித்...

செப்டம்பர் முதல் அனைத்து வாகனங்களும் தரம் பரிசோதிக்கப்படும்!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களினதும் தரத்தைப்...

அதிகரிக்கும் டெங்கு பரவல்: நாடு முழுவதும் 76, 000-ஐ கடந்த பாதிப்புகள்

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய...