அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

Date:

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபா வழங்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (9) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய, அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரீதிகம தொடம்கஸ்லந்த ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இடர் நிவாரண சேவை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வழங்கும் வரைவிலக்கணங்களின் அடிப்படையிலேயே, ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதா என்பது தீர்மானிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...