நிபா வைரஸ் குறித்து அச்சம் தேவையில்லை: சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்.

Date:

இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் குறித்து இலங்கை உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சகா விஜேமுனி வலியுறுத்தினார்.

இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான தொற்றுகள் எழுந்தால் தேவையான அனைத்து பரிசோதனை கருவிகளும் நாட்டில் கிடைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய நிபா வைரஸ், பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளது.

இதனால் தாய்லாந்து, சிங்கப்பூர், ‍‍ஹெங்கொங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை உள்ளது என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...