உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

Date:

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பதை விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் தெரிவித்தார்.

 

தேவைப்பட்டால், சாரா ஜாஸ்மினுக்கு எதிராக பிடியாணை பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். தாக்குதல்களுக்குப் பின்னால் சதி இருக்கிறதா என்று புதிய அரசாங்கம் விசாரித்து வருகின்றது.

 

இது தொடர்பான சில விவரங்களை நாடாளுமன்றத்தில் வெளியிட முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வது நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பின்னர் சாய்ந்தமருதில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் சாரா ஜாஸ்மின் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஆனந்த விஜேபால இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...