2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளின் போது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காக, முன்னாள் அமைச்சர்கள் சட்டவிரோதமான முறையில் நஷ்டஈடு பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்தல் (Notice) அனுப்புமாறு உயர்நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட குறித்த நஷ்டஈட்டுத் தொகையை மீண்டும் அறவிடுவதற்கு உத்தரவிடுமாறு கோரி சுற்றுச்சூழல் சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
