இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பல தமது வான்பரப்புகளை மூடியுள்ள நிலையில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானப் பயணிகளில் தாமதம் ஏற்படலாமென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
திட்டமிடப்பட்ட விமானப் பயணங்களின் நேர அட்டவணையை விடவும் தாமதம் ஏற்படலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் ஏனைய வடக்கு திசை நோக்கி பயணிக்கும் விமானங்கள் இவ்வாறு பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
