ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

Date:

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி வழங்கியமை எமது நாட்டின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையின் சிறந்த பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும்  இந்த முடிவு பல தசாப்தங்களாக எமது நாட்டை வழிநடத்தி வரும் சுதந்திரமான மற்றும் அணிசேரா கொள்கையின் பெருமைமிக்க மரபிற்கு இணங்க அமைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடலை ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் கீழ் ஒரு ‘அமைதி வலயமாக பேணுவதற்கு இலங்கை கொண்டுள்ள கொள்கை ரீதியான நிலைப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது.

பல நாடுகள் அழுத்தங்களுக்கு அடிபணியும் தற்போதைய சூழலில், இலங்கை எடுத்துள்ள இந்த முடிவு சர்வதேச விதிமுறைகள் மீதான மரியாதை, சமநிலை மற்றும் துணிச்சலை வெளிப்படுத்துகிறது.

இந்த கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றியதற்காக ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அமைச்சர், இலங்கையராக இருப்பதில் நாம் ஏன் பெருமை கொள்கிறோம்,  பரந்த இதயம் கொண்ட சிறிய தீவான இலங்கை, கொள்கை ரீதியான இராஜதந்திர விழுமியங்களால் பெருமை கொள்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...