எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

Date:

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை தொடர்பாக 1,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 150 முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகச் சில சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள பாதுகாப்பு கமராக்களை (CCTV) ஆய்வு செய்து சந்தேகநபர்களை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அறியாமையினாலோ அல்லது தவறுதலாகவோ பிறருடைய QR குறியீட்டைப் பயன்படுத்தியிருந்தாலும், அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் என அமைச்சின் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபால தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 6 மில்லியனுக்கும் அதிகமானோர் QR குறியீட்டிற்காகப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய பொலிஸாருடன் இணைந்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் பாகிஸ்தானின் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்!

இலங்கையிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயமும்,  பாகிஸ்தானிய சமூகத்தினரும் இணைந்து பாகிஸ்தானின் 79-வது சுதந்திர...

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிப்பு!

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள்...

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள...