துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி

Date:

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு சிறைச்சாலை வளாகத்தினுள் துமிந்த சில்வாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வாக்குமூலம் அளிக்கும் சந்தர்ப்பத்தில் துமிந்த சில்வா சட்டத்தரணியின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள ‘தெமட்டகொட ருவன்’ எனப்படும் சந்தேகநபருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக 50 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகவே துமிந்த சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...