வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

Date:

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற வாரத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து இன்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விவாதம் அன்றைய தினம் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஏப்ரல் 9ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, இந்த பிரேரணைகள் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...