அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

Date:

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

கடந்த ஐந்து நாட்களாகவே மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் உலகளவில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இராணுவத்தின் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் அலி அயத்துல்லா கமேனி, இராணுவத் தளபதி உள்பட 45-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதன் விளைவாக அமெரிக்காவுக்கு இராணுவ உதவிகளை மேற்கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தது.

இந்தத் தாக்குதலில் சவூதியின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் தலைமையகம், மத்திய கிழக்கின் மிகப் பெரிய அமெரிக்க தளம் அமைந்துள்ள கத்தாரின் அல்- உதெயித் விமானப் படைத் தளம், குவைத்தில் உள்ள அலி அல்-சலெம் படைத் தளம், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்களின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தின.

இதில், ஈரானின் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாக, அமீரகம், கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும், சுமார் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததுடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலில் அமீரகத்தில் உள்ள அமேசானின் தரவுகள் மையமும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது.

அமேசான் வலைதள சேவைகளின் தரவு மையங்களில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு உள்ள வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் செயலிழந்தன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு தரவு மையங்களும் , பஹ்ரைனில் உள்ள மையமும் டிரோன் தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்ததாகவும், வங்கி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் அமேசான் வலைதள சேவைகள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...