இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு கருத்திட்டப் பத்திரமொன்றை ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
விஷேட நிபுணர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட இக்கருத்திட்டப் பத்திரத்தை இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் தலைவர் பிரியான் ஆர்.விஜயபண்டார ஊடக துறைப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னாவுக்கு ஊடக அமைச்சின் கேட்போர் கட்டத்தில் கையளித்தார்.
சிரேஷ்ட ஊடகவியளார்கள், நிருவாகத்துறை உயரதிகரிகள், வெகுஜனத் தொடர்பு மற்றும் ஊடகத்துறைசார் வல்லுனர்கள், சட்ட அறிஞர்கள் துறை சார்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரால் இக்கருத்திட்டப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது –
இவ்வைபவத்தின் போது கருத்துத் தெரிவித்த ஊடகத்துறைப் பிரதி அமைச்சர் கலாநிதி ஆரியரத்ன. இலங்கைப் பத்திரிகைப் பேரவை களைக்கப்பட இருப்பதுடன் அதற்குப் பதிலாக பல்வேறு தரப்புகளின் கருத்துக்கள் பெறப்பட்டு சுயாதீன ஊடக ஆணைக் குழு அமைப்பதுடன் அது குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் விரைவாகவும் அமைப்பது அவசியமாகும் எனத் தெரிவித்தார்.
சுதந்திர ஊடக அமைப்பும் இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
(ஹில்மி முஹம்மது)
