QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

Date:

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைவாகவே உள்ளது.

தற்போது 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் ஏறக்குறைய 30 மொபைல் செயலிகளுடன் LankaQR உள்கட்டமைப்பு செயல்பாட்டில் இருந்தாலும், அவற்றின் அதிக பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், லங்கா QR மூலம் சுமார் 274,000 பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டன, இதன் மொத்த மதிப்பு 1.18 பில்லியன் ரூபாவாகும். இதனால் QR குறியீடு மூலம் செய்யப்படும் ஒரு சராசரிப் பரிவர்த்தனையின் மதிப்பு 5000 ரூபாவை விட குறைவாகவே உள்ளது.

இவற்றை கவனத்திற்கொண்டு இது தொடர்பில் 2026 வரவு செலவு திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய 5000 ரூபாவிற்கு குறைந்த பண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு எந்தவொரு மேலதிக கட்டணமும் அறவிடாது குறியீட்டை அடிப்படையாக கொண்டு டிஜிட்டல் பண செலுத்தலை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...