கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆக்கங்களை உலகிற்கு பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட ‘வளர்பிறை’ ஆண்டுச் சஞ்சிகையின் அங்குாரார்ப்பண வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் ஏ.ஜி.ஏ. ஹபீல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது, பாடசாலை மாணவர்களின் கல்விப் பயணத்திலும் கலை இலக்கிய முயற்சிகளிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அத்துடன், இந்தச் சஞ்சிகையின் முதலாவது இதழாசிரியராக பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரியை ஆர்.எப். ருமைஸா அவர்கள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

